Friday, December 02, 2005

 

உணர்வூட்டும் கதை - 3

ஒரு மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றார் நகரசபைத் தலைவர். அது ஒரு தொற்றுநோய் சிகிச்சை நிலையம். அங்கிருந்த நர்ஸ் சுறுசுறுப்பாக நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். கைக்கு உறை ஏதும் போட்டுக் கொள்ளவில்லை. அவ்வப்போது குழாயில் கையைக் கழுவிக் கொண்டாள். 'ஏனம்மா கைக்கு உறை போட்டுக் கொள்ளவில்லை? என்று நகரசபைத் தலைவர் கேட்டார். 'உறைகள் தீர்ந்து விட்டன. அடுத்த சப்ளை வரும் வரையில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் வேலை செய்கிறேன்', என்றவள், 'ஆனால் எனக்கு வேறொரு வருத்தம் இருக்கிறது' என்றாள். 'வேறு என்ன வருத்தம்?' என்று நகரசபைத் தலைவர் கேட்டார். 'என்னால் ஐம்பது நோயாளிகளைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இருபத்தைந்து பேரைத்தான் என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்' என்றாள் அந்த நர்ஸ்.

கதைகள் நன்றாக இருந்தனவா. நன்றி ரங்கராஜன். மேலும் ஆரோக்கிய பதிவுகள் தொடர்ந்து வரும்.





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]