tag:blogger.com,1999:blog-194762782024-02-29T00:16:12.126+05:30நன்னம்பிக்கை முனைவாழ நினைத்தால் வாழலாம்.
நம்பினோர் கெடுவதில்லை.உலகன்http://www.blogger.com/profile/12947471799407092437noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-19476278.post-1137150095336129762006-01-13T16:30:00.000+05:302006-10-10T09:49:03.943+05:30ஆளுமையின் இலக்கணம் - விவேகானந்தர்விவேகானந்தரை நிறைய பேர் வழக்கமான சாமியார் போல் நினைத்து கொண்டிருப்பார்கள், அவரது காவி உடையணிந்த தோற்றமும் அது போன்ற நினைக்க தூண்டுவது இயல்பு. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை படிப்பவர்களோ அல்லது அவரது உரைகளை உட்கொள்பவர்களோ அவர் மூட நம்பிக்கைகளுக்கு முட்டு கொடுக்கும் சாமியார் அல்ல வாழ்வு முறைகளுக்கு வழி சொன்ன மெய்ஞானி என்பதை தெரிந்து கொள்ளலாம். எப்படி அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் தான் ஒரு இஸ்லாமியராகவே வாழ்ந்து அந்த மதத்தினை உணர்ந்தாரோ அதுபோல அத்தனை மதங்களையும் ஆழப் படித்து அத்தனை நாடுகளின் சூழலையும் உணர்ந்து சாதி மத பேதமின்றி மனிதம் உயர வழி சொன்னவர் விவேகானந்தர்.<br /><br />அதனால் தான் அமெரிக்காவில் மதங்களுக்கான பாராளுமன்றத்தில் அவர் உரையாற்ற சென்ற போது ஹார்வர்டு பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட் இவரை பற்றி கூறும் போது, "நமது நாட்டின் அத்தனை பேராசிரியர்களின் அறிவையும் ஒன்று சேர்த்தாலும் இந்த ஒரு மனிதனின் அறிவுக்கு ஈடாகாது" என்று கூறினார். இந்த நூற்றாண்டு துவக்கம் வரையே இந்தியாவை பற்றி வெளி நாடுகளில் என்ன அபிப்ராயம் இருந்தது என்பது தெரியும். அப்படியிருக்க ஏறக்குறைய 110 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வந்த ஒரு துறவியை பார்த்து அமெரிக்க பேராசிரியர் ஒருவர் பார்த்த சில தினங்களுக்குள் இவ்வாறு கூற வேண்டுமென்றால், அது தான் உண்மையான ஆளுமை. அவர் சொன்னதற்கேற்ப உலகின் பல்வேறு மத கலாச்சாரங்களை சேர்ந்த சுமார் 7000 பேர் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் விவேகானந்தரது பேச்சு உயர்ந்த இடத்தை பிடித்தது என்பதும், இந்து மதம் என்பது மூடப் பழக்க வழக்கங்களின் மொத்த தொகுப்பு என்று எண்ணியிருந்த மேற்கு உலகத்தின் மாயை மறைந்தது என்பதும் சரித்திரம்.<br /><br />அவரின் சில சிந்தனைகளை பாருங்கள் :<br /><br />"தன்னம்பிக்கை கொண்ட சில மனிதர்களின் சரித்திரம் தான் உலகத்தின் சரித்திரமாகிறது, அந்த தன்னம்பிக்கையே உள்ளிருக்கும் தெய்வீக தன்மையை வெளிக்கொண்டு வருகிறது."<br /><br />"ஒரே ஒரு சிந்தனையை எடுத்து கொள்ளுங்கள், அந்த ஒரு சிந்தனையை உங்கள் வாழ்வாக்குங்கள் - அதனை பற்றி நினையுங்கள், அதனை பற்றி கனவு காணுங்கள், அந்த சிந்தனையிலேயே வாழுங்கள், உங்களின் மூளை, தசைகள், நரம்புகள் மற்றும் உங்கள் உடம்பின் ஒவ்வொரு பாகமும் அந்த சிந்தனையால் நிரம்பட்டும், மற்ற சிந்தனைகள் உங்களை விட்டு விலகட்டும், இது தான் வெற்றிக்கான வழி".<br /><br />"என் வாழ்க்கையில் நான் கற்று கொண்ட மிகப்பெரிய பாடம் கடமையின் விளைவில் காட்டும் அதே கவனத்தை கடமையாற்றும் வழியிலும் காட்ட வேண்டும் என்பது தான். வெற்றியின் ரகசியம் அத்தனையும் இந்த சூத்திரத்தில் தான் அடங்கியுள்ளதாக தோன்றுகிறது".<br /><br />"கோழைகளும் முட்டாள்களுமே , 'இது விதியின் செயல்' என்று சொல்வதாக ஒரு சமஸ்கிருத பழமொழி சொல்கிறது. திடமுள்ள மனிதர்கள் நிமிர்ந்து நின்று 'என் விதி என் கையில்' என்று முழக்கமிடுகிறார்கள். வயதாக வயதாக தான் மனிதன் விதியை பற்றி அதிகம் நினைக்கிறான். இளைஞன் பெரும்பாலும் ஜோசியத்தின் பக்கம் வருவதில்லை".<br /><br />இப்போது புரியுமே, நாம் ஏன் அவரது பிறந்த தினத்தினை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம் என்று. அவரது கருத்துகள் உலகம் முழுவதும் அள்ளிப் பருக வேண்டிய அமுத மொழிகள். 'பரிசுத்தமாக இருப்பதும் பிறருக்கு நன்மை செய்வதுமே உலகின் அத்தனை வழிபாடுகளின் சாரம்' என்ற அவரது உயர்ந்த தத்துவத்தினை பின்பற்ற முயற்சிப்பதே அவரை நாம் நினைவு கூறும் சிறந்த வழியாக இருக்கும்.உலகன்http://www.blogger.com/profile/12947471799407092437noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19476278.post-1135179207350679772005-12-21T21:01:00.000+05:302005-12-21T21:03:27.363+05:30சொர்க்கத்திற்கு செல்லும் வழி - கதைஒரு துறவி கடற்கரையில் அமர்ந்து கடலின் அலை ஓசையில் கண்மூடி லயித்திருந்தார். அப்போது ஒரு சாம்ராஜ்ய சக்கரவர்த்தி அங்கு வந்தான். அங்கு அந்த துறவியை கண்டு அவரது அருகில் வந்த அவன் அவரிடம் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு செல்லும் வழியை கூறுமாறு கூறினான். அவனும் அவனது படைகளும் மிகுந்த சத்தம் எழுப்பிய போதும் அது அந்த துறவியை எந்த விதத்திலும் கவனத்தைக் கவராதது போல அந்த துறவி அமர்ந்திருந்தார். எரிச்சலுற்ற சக்கரவர்த்தி மீண்டும் அந்த துறவியிடம் அந்த கேள்வியை கேட்டான். இப்போதும் அந்த துறவி எந்த சலனமும் காட்டவில்லை. அத்தனை பேர் முன்னிலும் தன்னை அவமானப்படுத்திய அந்த துறவியின் மீது கடும் கோபம் கொண்டான் சக்கரவர்த்தி. உறையிலிருந்த தன் வாளை உருவி ஓங்கினான். அந்த துறவி இன்னும் கண்ணை விழிக்காமலே அவரிடமிருந்து பலத்த சிரிப்பு சத்தம் கேட்டது. திடுக்குற்ற சக்கரவர்த்தி ஓங்கிய வாளை அப்படியே நிறுத்தி கோபம் மாறாத கண்களுடன் துறவியை உற்றுப் பார்க்க அவர் சொன்னார், இது தான் நரகத்திற்கு செல்லும் வழி . சக்கரவர்த்தி தலையை குனிந்தான். வாளை கீழே போட்டு விட்டு அவர் முன்னால் மண்டியிட்டு தன்னுடைய அவசர புத்தியை மன்னிக்குமாறு கோரினான். இப்போது துறவி கண் விழித்து சொன்னார், இது தான் சொர்க்கத்திற்கு செல்லும் வழி.<br />என்னுடைய கமெண்ட் : அதிகார வர்க்கத்தில் உள்ளோருக்கு இந்த விழிப்பு வந்து விட்டால் நாட்டில் பல குழப்பங்கள் இருக்காது என்று தோன்றுகிறது.உலகன்http://www.blogger.com/profile/12947471799407092437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19476278.post-1134207947702698992005-12-10T15:14:00.000+05:302005-12-17T20:26:40.330+05:30நீட்டம் கண்ட முயல் ஆமை நீதிக் கதைஇந்தக் கதை எனக்கு மின்னஞ்சலில் வந்தது. யாரோ ஒரு புண்ணியவான் உபயோகமாகச் சிந்தித்திருக்கிறார். நமக்குத் தெரிந்த முயல் ஆமை, பாட்டி வடை சுட்ட கதை போன்ற குழந்தைகளுக்கான கதையை வைத்து கார்பரேட் குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஏதோ ஒரு நிறுவனப் பயிற்சியாளர் தயாரித்துள்ளார் என்று தெரிகிறது. நல்ல கதை. இன்று உலகமே கார்பரேட் மயமாகி வரும் இந்த காலத்தில் இந்தக் கதை உண்மையிலேயே பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனி கதை :<br /><br />முயலும் ஆமையும்<br /><br />ஒரு முயலுக்கும் ஆமைக்குமிடையே யார் விரைவாக ஓடுகிறார் என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களிடையே ஓட்டப்பந்தயம் நடத்தி அதன் வெற்றியாளரைத் தீர்மானிக்க அவை இரண்டும் ஒத்துக் கொண்டன.<br /><br />தூரத்தை தீர்மானித்த பின் ஓட்டப் பந்தயம் துவங்கியது. முயல் அதி வேகத்தில் ஓடியது. ஆமையும் மனம் தளராமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. வேகமாக ஓடிய முயல் வழியில் ஒரு அற்புதமான சோலையைக் கண்டதும் நிதானித்தது. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துச் செல்ல அதன் மனம் உந்தியது. ஆமையின் வேகம் நமது வேகத்தில் பத்தில் ஒரு பங்கு கூடக் கிடையாது, அப்படியிருக்க நாம் கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்து விட்டு பிறகு உற்சாகமாகப் பயணத்தைத் தொடர்வதால் தவறொன்றுமில்லை என்று அதன் உள்மனம் ஆதரவுக் குரல் கொடுக்க உட்கார்ந்த முயல் கண்கள் செருகி அசந்து தூங்கத் துவங்கியது.<br /><br />வெகு நேரம் கழித்து நம்பிக்கையின்றி அந்த வழியே வந்து கொண்டிருந்த ஆமை முயல் தூங்கும் காட்சியைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தது. தனது பயணத்தைத் தொடர்ந்த ஆமை சிறிது நேரத்தில் இலக்கை எட்டியது. அங்கேயே முயலுக்காகக் காத்திருந்தது, வெகு நேரம் கழித்து விழித்த முயல் மிகுந்த நேரமாகி விட்டதை அடுத்து அரக்கப் பரக்க இலக்கைக் குறிவைத்து ஓட ஆரம்பித்து. அங்கே அது பயந்தது போலவே ஆமை கர்வத்துடன் அமர்ந்திருப்பது கண்டு வெட்கித் தலைகுனிந்தது.<br /><br />நீதி : நிதானம் அலட்சியத்தை வெல்லும்.<br /><br />முயலும் ஆமையும் - 2<br /><br />இச்சம்பவத்தில் மிகவும் மன வருத்தமுற்ற முயல் சுய பரிசோதனையில் இறங்கியது. அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையும், அதனால் விளைந்த கர்வமும், அதனால் விளைந்த அசட்டையும் கவனக் குறைவுமே தனது தோல்விக்குக் காரணம் என்பதை உணர்ந்தது.<br /><br />தன்னுடைய திறனை நிரூபிக்க மீண்டும் ஆமையை போட்டிக்கு அழைத்தது. ஆமையும் உடனே ஒத்துக் கொண்டது. இம்முறை மனதை ஒருமுகப்படுத்தி ஓடிய முயல் ஆமைக்கு பல மணி நேரம் முன்னதாகவே இலக்கை அடைந்து விட்டது.<br /><br />நீதி : நிதானம் நல்லது. எனினும் விழிப்புடன் இணைந்த வேகத்துடன் செயல்படுவது அதனினும் சிறந்தது. <br /> <br />முயலும் ஆமையும் - 3<br /><br />இம்முறை ஆமை யோசிக்க ஆரம்பித்தது. இப்போதிருப்பது போல் போட்டி அமைப்பு இருக்கும் வரை முயலை தான் போட்டியில் வெல்வது என்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்தது. சற்று யோசித்து ஒரு தீர்மானத்திற்கு வந்த ஆமை மீண்டும் முயலை போட்டிக்கு அழைத்தது. முயலும் உடனே யோசிக்காமல் ஒப்புக் கொண்டது. இந்த முறை போட்டிக்குரிய பாதை சற்று மாற்றியமைக்கப்பட்டது. பாதையின் இடையே ஒரு ஓடை குறுக்கிட்டது. வேகமாக ஓடிய முயல் ஓடையின் அருகே வந்ததும் அதனை எப்படிக் கடக்கலாம் என்று சிந்திக்க வேண்டியதாயிற்று. வெகு நேரம் கழித்து வந்த ஆமை தன் திட்டம் பலித்ததை எண்ணி மகிழ்ந்தது. அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் ஓடையில் நுழைந்து நீந்தி அக்கரையை அடைந்தது.<br /><br />நீதி : உங்கள் திறமை எந்த துறையில் இருக்கிறது என்பதை முதலில் கண்டறிந்து கொள்ளுங்கள். அதற்குகந்த துறையில் தான் உங்கள் போட்டித் திறன் அதிகமாக இருக்கும், நீங்கள் வெற்றி பெற முடியும்.<br /><br /> <br />முயலும் ஆமையும் - 4<br /><br />இப்போது முயல் ஆமை இருவருக்குமே உண்மை விளங்கியிருந்தது, அவரவருக்கொரு திறமை இருக்கும், அதில் ஒருமுகப்பட்டு கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதைக் கண்டு கொண்டன. இப்போது இருவருக்கும் இடையே இருந்த காழ்ப்புணர்ச்சியும் மறைந்து விட்டிருந்தது. இருவர்களும் நண்பர்களுமாகி விட்டார்கள். இப்போதெல்லாம் நீர்ப்பாதைகளை கடக்க வேண்டியிருந்தால் முயல் ஆமை மீது அமர்ந்து செல்லும் காட்சியும், விரைவாகச் செல்ல வேண்டிய நேரங்களில் ஆமை முயல் மீது அமர்ந்து செல்லும் காட்சியும் இயல்பாகி விட்டது.<br /><br />நீதி : ஒவ்வொரு துறையிலும் எல்லா விதமான திறமைகளுக்கும் தேவை இருக்கும், ஒரு நபரே எல்லாத் திறமைகளையும் கொண்டிருத்தல் இயலாது, பிறருடன் இணைந்து தான் நாம் பயணித்து வெற்றி காண முடியும். எனவே நமது குழுப் பண்பினை வளர்த்துக் கொண்டு மற்றவர்களின் திறமைகளையும் மதித்து அவர்களுடன் இணைந்து பணியாற்றினால் கடினமான பாதைகளையும் சுலபமாகவும் விரைவாகவும் கடக்க முடியும். <br /><br /><br />சுபத்துடன் முடிவடைந்துள்ள இக்கதைக்கு என்னுடைய கமெண்ட் :<br /> பள்ளிக் கதைகளையே இன்னும் கற்க வேண்டிய நிலையிலுள்ள நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு இந்தக் கதை உபயோகப்படுமா என்று தெரியவில்லை. எப்படியோ இதே போன்று இன்னும் சில கதைகளையும் தமிழாக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.உலகன்http://www.blogger.com/profile/12947471799407092437noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-19476278.post-1133849912097010592005-12-06T11:45:00.000+05:302005-12-06T11:50:50.916+05:30எனக்கு பிடித்த மேற்கோள் - 1He who knows not and knows not that he knows not is a fool; avoid him.<br />He who knows not and knows that he knows not is a student; teach him.<br />He who knows and knows not that he knows is asleep; wake him.<br />He who knows and knows that he knows is a wise man; follow him.<br /><br />Attributions: Persian apothegm, Sanskrit Saying<br /><br />ஒரு விஷயத்தை தெரியாதததுடன் தனக்கு தெரியவில்லை என்பதும் தெரியாமலிருப்பவன் முட்டாள் - அவனைப் புறக்கணி<br />ஒரு விஷயத்தை தெரியாமலிருந்தாலும் அது தனக்கு தெரியவில்லை என்பதாவது தெரிந்திருப்பவன் மாணவன் - அவனுக்குக் கற்றுக் கொடு<br />ஒரு விஷயத்தை தெரிந்திருந்தும் அது தனக்கு தெரிந்துள்ளது என்பது தெரியாதவன் உறங்குகிறான் அவனை எழுப்பி விடு<br />ஒரு விஷயத்தை தெரிந்திருப்பதும் மற்றும் தனக்குத் தெரிந்துள்ளது என்பதும் தெரிந்திருப்பவன் தலைவன் - அவனைப் பின்பற்று<br /><br />- பெர்சியப் பழமொழி , சமஸ்கிருத வழக்கு<br />என்னுடைய கமெண்ட் :<br />பல நிறுவன நிர்வாகங்களுக்கும் மற்றும் குழுவாகப் பணியாற்றும் இடங்களுக்கும் குறிப்பாக HRகளுக்கு உபயோகமான மேற்கோள்.உலகன்http://www.blogger.com/profile/12947471799407092437noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19476278.post-1133547081710487362005-12-02T23:35:00.001+05:302005-12-02T23:44:13.890+05:30உணர்வூட்டும் கதை - 3ஒரு மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றார் நகரசபைத் தலைவர். அது ஒரு தொற்றுநோய் சிகிச்சை நிலையம். அங்கிருந்த நர்ஸ் சுறுசுறுப்பாக நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். கைக்கு உறை ஏதும் போட்டுக் கொள்ளவில்லை. அவ்வப்போது குழாயில் கையைக் கழுவிக் கொண்டாள். 'ஏனம்மா கைக்கு உறை போட்டுக் கொள்ளவில்லை? என்று நகரசபைத் தலைவர் கேட்டார். 'உறைகள் தீர்ந்து விட்டன. அடுத்த சப்ளை வரும் வரையில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் வேலை செய்கிறேன்', என்றவள், 'ஆனால் எனக்கு வேறொரு வருத்தம் இருக்கிறது' என்றாள். 'வேறு என்ன வருத்தம்?' என்று நகரசபைத் தலைவர் கேட்டார். 'என்னால் ஐம்பது நோயாளிகளைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இருபத்தைந்து பேரைத்தான் என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்' என்றாள் அந்த நர்ஸ்.<br /><br />கதைகள் நன்றாக இருந்தனவா. நன்றி ரங்கராஜன். மேலும் ஆரோக்கிய பதிவுகள் தொடர்ந்து வரும்.உலகன்http://www.blogger.com/profile/12947471799407092437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19476278.post-1133483960219928192005-12-02T06:06:00.000+05:302005-12-02T06:09:20.226+05:30உணர்வூட்டும் கதை - 2கடற்கரை ஓரமாக இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டு சென்றபோது ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தை தடித்தது . ஜான் ஜோசப்பை அறைந்தான். அறை வாங்கிய ஜோசப் உடனே, 'ஜான் தன்னை அறைந்தான்' என்று மணலில் எழுதினான். சற்றைக்கெல்லாம் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு, மேலே நடந்தார்கள். பெரிய அலையொன்று எழுந்து தாக்கியதில் ஜோசப் கடலில் விழுந்தான். ஜான் கடலில் குதித்து அவனைக் காப்பாற்றினான். கரைக்கு வந்த ஜோசப், அருகிலிருந்த பாறையில் 'ஜான் என்னைக் காப்பாற்றினான்' என்று செதுக்கினான். திகைத்து நோக்கிய ஜானிடம் ஜோசப் சொன்னான்: 'கெட்டதை மணலில் எழுது. நல்லதைப் பாறையில் எழுது'.<br /><br />என் கமெண்ட்: <br /><br />இதே விஷயத்தை திருவள்ளுவர் எவ்வளவு அற்புதமாகச் சொல்கிறார் பாருங்கள் :<br /><br /><strong>நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது</strong><br /><strong>அன்றே மறப்பது நன்று.</strong>உலகன்http://www.blogger.com/profile/12947471799407092437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19476278.post-1133424979970798542005-12-01T13:36:00.000+05:302005-12-05T17:25:02.760+05:30உணர்வூட்டும் கதை - 1இந்த கதைகள் சமீபத்தில் மாம்பலம் டைம்ஸில் படித்தவை. உபயம் திரு <span style="color:#9999ff;">ரா.கி.ரங்கராஜன்.</span><br /><br />ஒரு சாலையில் கார்கள் வேகமாகப் பறந்து கொண்டிருந்தன. ஒரு சிறுவன் பெரிய கல்லொன்றை எடுத்து ஒரு காரின் மீது அடித்தான். கண்ணாடி உடைந்தது. கார் ஓட்டியவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்து, 'ஏண்டா கல்லடித்தாய்?!'" என்று அதட்டினார். ' காரை நிறுத்தும்படி கையைக் காட்டிக் கொண்டேயிருந்தேன். யாரும் நிறுத்தக் காணோம். அதனால் கல்லடித்தேன். நீங்க நிறுத்தினீங்க', என்றான் சிறுவன். சொல்லிவிட்டு, 'ஏன் காரை நிறுத்தணும் என்று கேட்பீங்க. என்னோடு வாருங்கள் ', என்று சிறிது தூரம் அழைத்துச் சென்றான். 'பாருங்கள் ' என்று காட்டினான்.<br /><br />அங்கே சாலையின் ஓரமாக இருந்த சரிவில் ஒரு சக்கர நாற்காலி கவிழ்ந்து கிடந்தது. இவனை விட வயதில் சின்னவனான ஒரு சிறுவன் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு ஒரு கால் இல்லை. 'என் தம்பி அவன். சக்கர நாற்காலியில் உட்கார்த்தி வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தேன். ஏதோ ஒரு கல்லில் இடறி வண்டி விழுந்திட்டுது. வண்டியை நிமிர்த்தி, சாலைக்கு அதைக் கொண்டு வர என்னால் முடியவில்லை. பெரியவங்க யாராவது உதவிக்கு வர மாட்டாங்களா என்று தான் கார்களை நிறுத்தப் பார்த்தேன்' , என்று அவன் விளக்கினான்.<br /><br />கார் ஓட்டி வந்தவர் வண்டியை நிமிர்த்தி, காலில்லாத சிறுவனை அதில் உட்கார்த்தி, சாலைக்குக் கொண்டு வந்து வைத்து விட்டு காரை ஓட்டிக் கொண்டு சென்றார். ஆனால், அதன் பிறகு உடைந்த கண்ணாடியை மாற்றவில்லை. அப்படியே வைத்திருந்தார் . ரொம்ப வேகமாக ஓட்டக் கூடாது என்பதும், யாரும் உதவி கேட்டுக் கைகாட்டினால் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்பதும் என்றைக்கும் தனக்கு ஞாபகம் இருக்க வேண்டும் என்பதற்காக.<br /><br />அந்தக் கட்டுரையில் இன்னும் 2 சிறந்த கதைகள் இருந்தன . அவை இனி வரும் பதிவுகளில்.<br /><br /><span style="color:#6666cc;">கதைக்கு என்னுடைய கமெண்ட் : </span><br /><span style="color:#6666cc;"></span><br />இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு பராசக்தி படம் ஞாபகத்திற்கு வந்தது . சிவாஜி பட்டினியால் வாடும் போது யாரும் உதவி செய்ய மாட்டார்கள். அவர் பைத்தியக்காரன் போல் நாடகமாடி உணவுப் பொருட்களைப் பறித்து உண்பார்.<br /><br />இப்போதெல்லாம் எங்கு கார் நின்றாலும் பிச்சைக்காரக் குழந்தைகள் தொல்லை தரும் சூழலில் நிறுத்தாமல் செல்பவர்களையும் என்ன குற்றம் சொல்ல முடியும். இதில் சில விஷமிகள் வேறு நடு வழியில் நாடகமாடி பணம் பறிக்க குழந்தைகளையும் சிறுவர்களையும் பலியாடாக்குகின்றனர். ம், கழிவிரக்கம் தான் தோன்றுகிறது.<br /><br /><br /></span>உலகன்http://www.blogger.com/profile/12947471799407092437noreply@blogger.com1