Friday, December 02, 2005

 

உணர்வூட்டும் கதை - 2

கடற்கரை ஓரமாக இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டு சென்றபோது ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தை தடித்தது . ஜான் ஜோசப்பை அறைந்தான். அறை வாங்கிய ஜோசப் உடனே, 'ஜான் தன்னை அறைந்தான்' என்று மணலில் எழுதினான். சற்றைக்கெல்லாம் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு, மேலே நடந்தார்கள். பெரிய அலையொன்று எழுந்து தாக்கியதில் ஜோசப் கடலில் விழுந்தான். ஜான் கடலில் குதித்து அவனைக் காப்பாற்றினான். கரைக்கு வந்த ஜோசப், அருகிலிருந்த பாறையில் 'ஜான் என்னைக் காப்பாற்றினான்' என்று செதுக்கினான். திகைத்து நோக்கிய ஜானிடம் ஜோசப் சொன்னான்: 'கெட்டதை மணலில் எழுது. நல்லதைப் பாறையில் எழுது'.

என் கமெண்ட்:

இதே விஷயத்தை திருவள்ளுவர் எவ்வளவு அற்புதமாகச் சொல்கிறார் பாருங்கள் :

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]